Tuesday, June 28, 2011

இயற்கை மற்றும் வன உயிரின ஆர்வலர்களுக்கு அரிய வாய்ப்பு


வன உயிரின புகைப்படகண்காட்சி - கறுப்பு வெள்ளையில்.........
இன்றும் நாளையும் 29,30 ஜீன் 2011
                 10 am to 6 pm
PSG மேலாண்மை கல்லூரி வளாகம் .........பீளமேடு


பிரபல கானுயிர் புகைப்பட நிபுணர்கள்
மா. கிருஷ்ணன்
டி.என்.ஏ. பெருமாள்
இவர்கள் எடுத்த அரிய புகைப்படங்களின் கணகாட்சி

30.06.2011 வியாழன் மாலை 5 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு

மா. கிருஷ்ணன் நினைவலைகள்   -  டி.என்.ஏ. பெருமாள்





 







டாக்டர் கிருஷ்ணமூர்த்தி - பிரபலயானை ஆராய்ச்சியாளர்
(எழுத்தாளர் ஜெயமோகன் படைத்த யானைடாக்டர் கதையின் கதாநாயகன்). நினைவலைகள்

                                             -
 கலைவாணன்(முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர்)


கானுயிர் ஆர்வலர் மற்றும் சூழலியல் எழுத்தாளர் திரு. தியோடர் பாஸ்கரன் கலந்து கொள்கிறார்


 














தங்கள் வரவு........... நல் வரவாகுக...........

தியாகு புக் சென்டர்.












மா.கிருஷ்ணன் (30.06.1912 - 18.02-1996)
இயற்கையியல் பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ்பெற்றவர். பத்மஸ்ரீ, ஜவகர்லால் நேரு நல்கை
முதலிய பெருமைகள் அவரைத் தேடி வந்தன. தமிழின் தொடக்க கால நாவலாசிரியர்களில் ஒருவரா அ.மாதவையாவின் மகன்.
1950,60களில் தமிழ் இதழ்களிலும் கலைக்கள்ஞ்சியத்திலும் அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை

நாவல் - கதிரேசன் செட்டியாரின் காதல் - 1996
கட்டுரை - மழைக்காலமும் குயிலோசையும் - 2002


மழைக்காலமும் குயிலோசையும் - புகழ்பெற்ற கானுயிர் வல்லுநரான மா.கிருஷ்ணன் கலைக்கள்ஞ்சியத்தில் பறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும் “வேடந்தாங்கல்” குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பு இது. சுருங்கச் சொல்லல், சுயபார்வை, காட்சிப்படித்தி மயக்கமூட்டும் நடை
ஆகியவற்றுடன் அனுபவ சாரமாகத்தகவல்களை மாற்றிவிடும் அவரது எழுதுமறை இக்கட்டுரைகளில் முழுமையாகத் துலங்குகிறது. அவரது எழுத்துக்கள் தமிழகம் சார்ந்தவை. நமது செல்வங்கள் பற்றியவை. தமிழ்  அறிவுப்புலத்திற்குப் பங்களிப்பவை. கானுயிர்களே உலகைக் காக்கும் என்னும் உணர்வு உறுதிப்படும் இந்நாளில் அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் தேவை. பறவைகளோடு இயைந்து வாழும் மகிழ்ச்சி பெருகும் வாழ்வை அவாவும் உள்ளங்களுக்கு மா.கிருஷ்ணனின் எழுத்துக்கள் நெருக்கமானவை...........

No comments:

Post a Comment