Saturday, March 17, 2012

அறம் - ஜெயமோகன்





இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. - ஜெயமோகன் .

 அறம் என்றால் என்ன வென்று பீஷ்மருக்கே தெரியவில்லை.... சாமான்யமான என்னை கேட்கரீங்களே......!

அறம் எனப்து தர்மம் எனில்,
 சாதாரண தர்மம் விசேஷ தர்மம் ஆபத்து தர்மம் 
இதில் ஜெயமோகன் கூறும்
மானுட வெற்றியைக் கொண்டாடும் 
அறம் தான் என்ன..........!

Wednesday, March 7, 2012

சுஜாதா - எப்போதும் பெண்





பெண் என்ற அதிசயத்தின் பால்.....
எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும்....,
ஏன், பக்தியும் தான் என்னை
இதை எழுத செலுத்தும் சக்திகள்....
என “சுஜாதாவின் கூட்டில் மலர்ந்த
எப்போதும் பெண் 1984 படித்தேன்
அட்ரினலின் இயக்கத்தில் அடி வயிறு கலங்கியது..
ஒவ்வொருவரும் உணரவேண்டிய புத்தகம்
ஏறகுறைய 28 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த
மருத்துவ வளர்ச்சியின் சூழலில்
இழந்து போனது எத்தனை எத்தனை உயிர்கள்....

எல்லாவற்றுக்கும் நடுவில் பெண்மையின்
பற்பல உணர்வுகளைத் தொடுத்த....
அந்த அடிநாதம்தான் எது...?

உணர்பவர்களுக்கு மட்டுமே புரியும்...