Wednesday, April 20, 2011

கல்கி - கோடைவிடுமுறை மட்டுமல்ல என்றுமே குதூகலமாக படிக்க வேண்டிய புத்தகங்கள்


கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் சிவகாமியின் சபதம்

கல்கியின் பார்த்திபன் கனவு


பொன்னியின் செல்வன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழசாம்ராஜ்யத்தின் வரலாறு ..............

இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்க்கும் வீரமிகு தமிழ் சமுதாயத்தின் வரலாறு   கல்கியின் கைவண்ணத்திலே ...................

சுந்தரசோழரின் மூத்த மகனான
ஆதித்தகரிகாலனின் மர்மம் நிறைந்த மரணம். ராஜராஜ சோழனாக உருவெடுத்த பொன்னியின் செல்வன், தோழமையுடன் வந்தியதேவன்... இவர்களுடன் வானதியும் குந்தவையும் .........
கடல் இளவரசியாக பூங்குழலியும் , மர்மசூழலின் மத்தியில் நந்தினி......... வீரபழுவேட்டயர்கள் ,
கட்டிகாத்த முதன் மந்திரி அநிருத்தபிரமராயர் வைணவஆழ்வார்கடியான்,  மணிமேகலை ............. இவர்கள் அனைவரும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ் சமுதாயத்தில் வாழ்வார்கள்.....

சிவகாமியின் சபதம்
முன்னும் அவனுடய நாமம் கேட்டால்...
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டால்...
திருநாவுகரசனின் திருப்பதிகத்துக்கு அபிநயம் பிடித்த .... அபிநய சுந்தரி சிவகாமி தன் சபதத்தை முடித்தாளா.........?
பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் மாமல்ல சக்ரவர்த்தி சிவகாமியின் சபதத்தை முடித்துக் கொடுத்தாரா...!

சிவகாமியின் 
கண்களில்........................ 
 
பார்த்திபன் கனவு
சோழசாம்ராஜ்ஜியத்திற்க்கு வித்திட்ட பார்திபசோழனின் கனவு........... முன்று நூற்றாண்டுகளுக்கு பிறகு சோழநாட்டின் வீரசிம்மாசனம் ஏறிய ராஜராஜ சோழன், அவனுடய புதல்வனான ராஜேந்திரசோழன் இவர்களுடைய காலத்தில் நனவானது.

1 comment:

  1. ஆதித்தகரிகாலனின் மரணம் ஒரு புரியாத புதிர்....
    அந்த புதிருக்கு விடை என்னவோ?

    ReplyDelete