Saturday, April 2, 2011

தலைமுறைகள் - நீல பத்மநாபன்

நீல.பத்மனாபனின் தலைமுறைகள் எனும் நாவல் நாகம்மை எனும் பெண்ணைச் சுற்றிச் சுழன்றாலும், அதனுடைய பரப்பு ஒரு மூன்று தலைமுறைகளை உள்வாங்கிக் கொண்டு உருவாகி அமைகிறது. அதுபோல, குறிப்பிட்ட ஒரு குடும்பம் மட்டுமல்லாமல் தொடர்புடைய பல குடும்பங்கள் புனையப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் நாகம்மை, திரவி ஆகியோர் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என்றால், நாகருப்பிள்ளை இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்.உண்ணாமலையாச்சி மூத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவள். இம்மூன்று தலைமுறையினரும் ஒரே குடும்பத்தில் இணைந்து வாழ்கின்றனர். அது ஒரு சிறிய குடும்பம். ஆனால் அதுதான் நாவலின் தலைமையான குடும்பம். இதனோடு இணைந்து வருவது உண்ணாமலை ஆச்சியின் அண்ணாச்சி கூனாங்காணிப் பாட்டாவின் குடும்பம். அவருக்கு இரு மனைவிகளும் , வெளியே ஒரு வைப்பாட்டியும் உண்டு. மூவர் வழியாகவும் பிள்ளைகுட்டிகள், பேரன் பேத்திகள் உண்டு. இந்த இரு குடும்பங்களுமே நாவலின் முக்கியமான குடும்பங்களாகும்.  உறவால் மட்டுமல்லாது கதைப் போக்கின் இணைவினாலும், முக்கியத்துவத்தினாலும் அவை பிணைப் புடையவை. மூத்த தலைமுறைகளைச் சித்தரிக்கின்ற மூன்றாவது குடும்பம், நாகம்மையின் தந்தை நாகருப்பிள்ளையின் மாமனாராகிய பத்மனாபப் பாட்டாவின் குடும்பமும், இந்தச் குடும்பங்களின் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்களும், ஒரே சமூகத்தில்(அதாவது ஏழூர்ச் செட்டியார்கள் சமூகத்தில்) ஒரே காலகட்டத்தில் வாழ்பவர்கள் என்றாலும் மாறுபட்ட வாழ்க்கைப் போக்குகளையும், வாழ்க்கை மதிப்புகளையும் கொண்டவர்கள்.

No comments:

Post a Comment